AANMEEGA ARAKADDALAI
ஆன்மீக அறக்கட்டளை
ආන්මීග අරකඩ්ඩලෙයි
THELLIPALAI MAHAJANA COLLEGE
ARAKADDALAI




LATEST EVENT - October 7, 2022
தமிழ்: வெள்ளிக்கிழமை, 7/10/2022 மகாஜன கல்லூரியின் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் தலைமையில் தென்னைப் பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திரு வைகுந்தன் முன்னாள் ஓய்வு நிலை அரச அதிபர் திரு வேதநாயகம் ஓய்வு நிலை கலைத்துறை பேராசிரியர் நாச்சியார் சக்தி அமைப்பின் பிரதானி திரு சிவநாயகம் விக்கினேஸ்வரன் மயூரம் பிரதேச செயலக மது ஒழிப்பு .உத்தியோகத்தர்கள் அவர்களின் பங்களிப்பில் மகாஜன ஆன்மீக அறக்கட்டளையின் ஊடாக போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வுகளும் 400 தென்னம் பிள்ளைகளும் 200 பயிர் விதைப் பக்கட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன. நிதியாளர்களான மகாஜன கல்லூரியின் பழைய மாணவரான அமரர் நந்தீஸ்வரர் (பொறியியலாளர்) அவர்களின் Toronto வாழ் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கப்ட்டது.








April 29, 2022
தமிழ்: இன்று 29|4/22 வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை மகாஜனா ஆன்மிக அறக்கட்டளை ஊடாக மல்லாகம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் 11.00 மதியமளவில் தென்னைப் பயிர் செய்கை சபை பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் பிரதேச செயலாளர் திரு சிவசிறி. இவ் அறக்கட்டளையின் பேசகரும் முன்னாள் அரச அதிபர் திரு வேதநாயகம் மேற்பார்வையிலும் இவ் அறக்கட்டளையின் தலைவர் பொருளாளர் தலைமையில் 3 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 3 ஆடுகளும் ஒவ்வொருவருக்கும் பராமரிப்பு செலவாக 5000/- பணமும். 2 நலிவுற்ற குடும்பங்களுக்கு கோழிகளும் கூடுகளும் தீவனமும் 5000/- பணமும். அனைவருக்கும் 2 தென்னம் பிள்ளைகளும் அமெரிக்காவில் வசிக்கும் Dr. சபா குல துங்கம் அவர்களும் கனடாவில் வசிக்கும் தந்தையும் மகனும் ஆகிய திரு சிவகுமார் மற்றும் திரு சுரேன் அவர்களுடைய நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப் பட்டன. இவ் உதவிகள் ஆனது காலத்தின் தேவையறிந்து தற்சார்பு பொருளாதாரத்தை இக்குடும்பங்களுக்கு வலுப்படுத்தும் என்பது உறுதி.